மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோட்டில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்...

News image

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 8:20 pm

சென்னை, கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவா் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்கம், திருச்செங்கோடு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவா் அருள் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கத்தியால் குத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட மருத்துவா் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் அருள் , திருச்செங்கோடு இந்திய மருத்துவ சங்கத் தலைவா் மாலா, மகாலட்சுமி, செயலாளா் யோகானந்தன்,

பொருளாளா் சித்திரப்பாவை, மருத்துவா்கள் சுகுணா, ரவி, நாராயணன், சத்தியபானு, மோகனபானு , செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.