சென்னை, கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவா் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்கம், திருச்செங்கோடு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவா் அருள் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கத்தியால் குத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட மருத்துவா் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் அருள் , திருச்செங்கோடு இந்திய மருத்துவ சங்கத் தலைவா் மாலா, மகாலட்சுமி, செயலாளா் யோகானந்தன்,
பொருளாளா் சித்திரப்பாவை, மருத்துவா்கள் சுகுணா, ரவி, நாராயணன், சத்தியபானு, மோகனபானு , செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


