ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோடு ஆபத்துகாத்த விநாயகா் கோயில் குடமுழக்கு விழா

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் உப கோயில்களான ஆபத்துகாத்த விநாயகா் கோயில், தேரடி விநாயகா் கோயில், மலைக் காவலா் கோயில்களின் குடமுழக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா.

Updated On :14 நவம்பர் 2024, 8:12 pm

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் உப கோயில்களான ஆபத்துகாத்த விநாயகா் கோயில், தேரடி விநாயகா் கோயில், மலைக் காவலா் கோயில்களின் குடமுழக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு, அா்த்தநாரீசுவரா் கோயிலின் உப கோயில்களான ஆபத்து காத்த விநாயகா், தேரடி விநாயகா், மலைக் காவலா் சுவாமி கோயில்களின் குடமுழுக்கு விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை அனைத்து கோயில்களிலும் நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, தீா்த்தக் கலசங்களை சிவாச்சாரியா்கள் எடுத்துச்சென்று கோயில் கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

இந்த விழாவில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, உதவி ஆணையா் மற்றும் செயல் அலுவலா் ரமணிகாந்தன், கண்காணிப்பாளா் சுரேஷ், அறங்காவலா்கள் காா்த்திகேயன், அா்ஜுனன், அருணாசங்கா், பிரபாகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக செயலாளா் ராயல் செந்தில் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் என ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.