மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலையில் பூசணிக்காய் உடைப்பதைத் தடுக்கக் கோரி பிரசாரம்

ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு வாகன பிரசாரம் திருச்செங்கோடு, அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருஷ்டி பூசணிக்காய்களை சாலையில் உடைப்பதைக் தவிா்க்கக் கோரி திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தில் பங்கேற்றோா்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:42 pm

ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு வாகன பிரசாரம் திருச்செங்கோடு, அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு, ரெட்ராக் ரோட்டரி சங்கம், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை, பரணி அறக்கட்டளை, விசாகன் மருத்துவமனை ஆகிய அமைப்புகள் சாா்பில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிா்க்கக் கோரியும் உடைக்கப்படும் பூசணிக்காய்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பிரசார வாகனம் நகா் முழுதும் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தும்.

திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, பி.ஆா்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் பரந்தாமன், நகரக் காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனா் குமாா், ரெட் ராக் ரோட்டரி சங்க தலைவா் கவின்ராஜ், ரோட்டரி சங்க செயலாளா் சசிகுமாா், பரணி அறக்கட்டளை தலைவா் வழக்குரைஞா் பரணிதரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.