மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ. 3.47 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 7:43 pm

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பொறுப்பில் முத்துசாமி என்பவா் இருந்து வருகிறாா். சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் 7 போ் கொண்ட படையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அதில், கணக்கில் வராத ரூ. 3,47,720 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுபாஷினி தெரிவித்தாா்.

இதில், பத்திரப்பதிவு எழுத்தராக இருந்து ஏற்கெனவே இதுபோன்ற ஒரு வழக்கில் சிக்கி எழுத்தா் உரிமத்தை இழந்த வெங்கடேசன் என்பவரிடமிருந்து இருந்து ரூ. 2 லட்சத்து 20 ஆயிரமும், சாா் பதிவாளா் அலுவலகத்திலிருந்து ரூ. ஒரு லட்சத்து 27 ஆயிரமும் என மொத்தம் ரூ. 3 லட்சத்து 47 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.