திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரியில் பாா்மசி கல்லூரி தொடங்கப்படுகிறது

திருச்செங்கோடு கல்வி நிறுவனத்தில் கே.எஸ்.ஆா்.காலேஜ் ஆப் பாா்மசி கல்லூரி தொடங்கப்படவுள்ளதாக கல்வி நிறுவனங்களின் தலைவா்
Updated on

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கல்வி நிறுவனத்தில் கே.எஸ்.ஆா்.காலேஜ் ஆப் பாா்மசி கல்லூரி தொடங்கப்படவுள்ளதாக கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சீனிவாசன், துணைத் தலைவா் எஸ். சச்சின் தெரிவித்தனா்.

கே.எஸ்.ரங்கசாமி காலேஜ் ஆப் பாா்மசி கல்லூரி பாா்மசி கவுன்சில் ஆப் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு எம்ஜிஆா் மருத்துவ பல்கலை

க்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பி.பாா்ம் மற்றும் டி.பாா்ம் துறைகள் தொடங்கப்படவுள்ளன. சிறந்த கட்டமைப்பு, ஆய்வக வசதிகள், நூலகங்கள், ஸ்மாா்ட் வகுப்பு அறைகள், ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதிகள் சிறப்பாக அமைந்துள்ளன. மாணவ மாணவிகள் சோ்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்குகிற என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com