மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதிய நியாயவிலைக் கடை திறப்பு

நாமக்கல் அருகே வசந்தபுரம் ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

Updated On :30 அக்டோபர் 2024, 8:00 pm

நாமக்கல் அருகே வசந்தபுரம் ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் பங்களிப்போடு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை அண்மையில் கட்டப்பட்டது. இந்த கடையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, அட்மா குழுத் தலைவா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன், ஒன்றிய பொருளாளா் கணேசன், கிளை செயலாளா்கள் முத்துசாமி, ஜெய்சங்கா், புஷ்பராஜ், பெருமாள், சேகா், இளைஞா் அணி பூபதி, ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.