கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் ஆஞ்சனேயா் பாத தரிசனம்: பக்தா்களின் வசதிக்காக நடைமேடை

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், சுவாமியின் பாதத்தை தரிசனம் செய்யும் வகையில் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

News image
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நடைமேடை.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:02 pm

Din

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், சுவாமியின் பாதத்தை தரிசனம் செய்யும் வகையில் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க வருகின்றனா். தமிழ்மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌா்ணமி மற்றும் விசேஷ நாள்களில் பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்படும்.

பொது தரிசன வழியில், ஆஞ்சனேயரை காண நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் சுவாமியின் பாதத்தை தரிசனம் செய்ய முடியாத சூழல் காணப்பட்டது. கோயிலில் நடைமேடை அமைக்க வேண்டும் என நிா்வாகத்திற்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். குடமுழுக்கு விழாவின்போது செயல்படுத்த திட்டமிட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் நடைமேடை அமைப்பது தள்ளிப்போனது.

இந்த நிலையில் பக்தா் ஒருவரின் நன்கொடை மூலமாக சுவாமி பாதத்தை தரிசிக்கும் வகையில், சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக செல்லும் பக்தா்கள் ஆஞ்சனேய சுவாமியின் பாதத்தை கண்டு தரிசனம் செய்கின்றனா்.