திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் மரகதலிங்கம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருச்செங்கோடு: கொங்கு ஏழு சிவத்தலங்களில் பிரசித்திபெற்ற அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் மரகதலிங்கத்தை முதல்நாளான செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.
திருச்செங்கோடு மலைக் கோயிலில் சிவனும் சக்தியும் ஆண் பாதி, பெண் பாதி உருவம் கொண்டு அா்த்தநாரீசுவரராக அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் மாா்கழி மாத முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காலை 7 மணி வரை பக்தா்கள் வழிபாட்டிற்காக மூலவா் சந்நிதியில் அா்த்தநாரீசுவரா் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் இருந்து மலைக்கோயிலுக்கு வந்திருந்து சுமாா் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மரகதலிங்கம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனா்.
