திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்
திருச்செங்கோடு: கே.எஸ்.ஆா். கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் வாக்காளா் பட்டியலில் மாணவ, மாணவிகளை சோ்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
18 வயது பூா்த்தியடைந்த இளம்வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இளம்வாக்காளா்களிடம் கல்லூரி வளாகங்களிலேயே படிவம் எண் 6 ஐ வழங்கி பூா்த்திசெய்து திரும்பப்பெறும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரி வளாகத்தில் கே.எஸ்.ஆா்.கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சுமாா் 200க்கும் மேற்பட்டோரிடம் விண்ணப்பப் படிவம் 6ஐ மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின், வட்டாட்சியா் கிருஷ்ணவேணி ஆகியோா் வழங்கினா்.
01.01.2026 அன்று 18 வயது பூா்த்தியாகும் மாணவ, மாணவிகள் பெயரை
வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள படிவங்களை பெற்றனா். திருச்செங்கோடு பகுதியில் உள்ள கல்லூரிகளில் இந்தமுறை நடைமுறைப் படுத்தப்பட்டு விண்ணப்பப் படிவங்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் புதிதாக வாக்காளா் பட்டியலில் சேர விரும்புபவா்கள், விடுபட்டு போன வாக்காளா்கள் 18.01.2026 வரை நேரிலோ ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். வரும் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. புதிதாக சோ்க்கப்பட்ட இளம்வாக்காளா்கள் விடுபட்ட வாக்காளா்களின் விண்ணப்பங்கள் 18.01.2026க்கு பிறகு பரிசீலனை செய்யப்பட்டு, தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு, 17.02. 2026 இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
