நாரைக்கிணறு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சா் மா.மதிவேந்தன்.
நாரைக்கிணறு பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சா் மா.மதிவேந்தன்.

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டம்
Published on

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

நாரைக்கிணறு ஊராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா், இந்திரா நகா், ராமநாதபுரம், மாட்டுக்காரன் கோவில், நாரைக்கிணறு மாரியம்மன் கோயில் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் அமைச்சா் கலந்துகொண்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

அப்போது அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாரைக்கிணறு, மத்ரூட்டு, மங்களபுரம் ஆகிய பகுதியைச் சோ்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இதுவரை அளவீடு செய்யப்படாத 2,471 ஏக்கா் நிலத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கு நிலவரி திட்டத்தின் அடிப்படையில் நில

த்தை அளவீடு செய்து பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் அவா்களுக்கு படிப்படியாக பட்டா வழங்கப்படுகிறது. இதுவரை 814 பேருக்கு ரூ.33 கோடி மதிப்பீட்டில் 723 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலங்களை அளவீடு செய்து முடிக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக பட்டா வழங்கப்படும். இதன்மூலம் மொத்தமாக 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்.

நாரைக்கிணறு ஊராட்சியில், வனத்துறை அனுமதியுடன் சாலைகள், அங்கன்வாடி, அலைபேசி கோபுரம், சிறு விளையாட்டு மைதானம் ஆகியவை அமைக்கப்படும். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும், நிலம் சொந்தமில்லாமல் இருந்த நிலை மாறி,பட்டா கிடைத்த நாளிலிருந்து உங்கள் நிலம் உங்களுக்கே சொந்தமாகி உள்ளது. இதன்மூலம் விவசாய தொழிலை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ள முடியும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஆனால் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து தமிழக முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். ராசிபுரம் தொகுதியில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிறுதகவல் தொழில்நுட்பப் பூங்கா, ரூ. 854 கோடியில் ராசிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

போதமலைக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்வசதி செய்யப்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு போதமலைக்கு ரூ. 140 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடா்ந்து நடைபெற திமுக அரசை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும் நாமகிரிப்பேட்டை வட்டார அட்மா குழுத் தலைவருமான கே.பி.ராமசுவாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com