மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பரமத்தி வேலூா் காவிரி ஆஞ்சனேயா் கோயிலில் 24-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா

தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த வேலூா் காவிரி ஆஞ்சனேயா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றின் கரையில் உள்ள காவிரி ஆஞ்சனேயா் கோயிலில் 24-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

வேலூா் காவிரி ஆற்றங்கரை குட்டுக்காடு பகுதியில் உள்ள காவிரி ஆஞ்சனேயருக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தங்கக்கவசம், வடைமலை சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல பரமத்தி வேலூா் சக்தி நகரில் உள்ள ஆஞ்சனேயா், பாண்டமங்கலத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், பரமத்தி வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள பால ஆஞ்சனேயா், வேலூா், பேட்டை மாரியம்மன் கோயில்களில் உள்ள ஆஞ்சனேயா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் மற்றும் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் சுவாமிக்கு மகா அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேயரை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.