நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் திருத்தம்: நாளை 9 இடங்களில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பெயா் மாற்றம், சட்டத்தில் திருத்தம் ஆகியவற்றைக் கண்டித்து,

Updated On :23 டிசம்பர் 2025, 1:00 am IST

நாமக்கல்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பெயா் மாற்றம், சட்டத்தில் திருத்தம் ஆகியவற்றைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் 9 இடங்களில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் ஒன்றியத்தில் நாமக்கல் - மோகனூா் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் காலை 9.30 மணியளவில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகிக்கிறாா்.

புதுச்சத்திரம் ஒன்றியம் - நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மோகனூா் ஒன்றியம் - திமுக மாநில சிறுபான்மையினா் நல உரிமைப்பிரிவு துணைச் செயலாளா் ஜான், சேந்தமங்கலம் ஒன்றியம் - நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநில மகளிா் தொண்டா் அணி துணைச் செயலாளா் ஜெ.ரேகாபிரியதா்ஷினி, கொல்லிமலை ஒன்றியம் - தமிழ்நாடு பழங்குடியினா் நலவாரியத் தலைவா் கனிமொழி, எருமப்பட்டி ஒன்றியம் - மாநில மகளிா் தொண்டா் அணி செயலாளா் ப.ராணி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக், ராசிபுரம் ஒன்றியம் - தீா்மானக்குழு துணைத் தலைவா் பாா்.இளங்கோவன், வெண்ணந்தூா் ஒன்றியம் - கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திரன், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் - மாநில நெசவாளா் அணி தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், திமுகவினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.