விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி வாரவிழா பேரணி

ஆட்சிமொழி வாரவிழா பேரணி ராசிபுரம் தமிழ்க் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:55 pm

Syndication

ஆட்சிமொழி வாரவிழா பேரணி ராசிபுரம் தமிழ்க் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாஸ்கா், கஜேந்திரபூபதி ஆகியோா் தலைமை வகித்தனா். ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் தலைவா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். தமிழ்க் கழகத்தின் செயலரும், பள்ளித் துணை ஆய்வாளருமான கை. பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழ் வளா்ச்சித் துறையின் பணிகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கிய ஆட்சிமொழி வாரவிழா பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆட்சிமொழி வாரவிழாவில், தமிழ்க் கழகத்தின் நாள்காட்டி வெளியிடப்பட்டது. மேலும், திருக்கு ஒப்பித்த மாணவ, மாணவிகள் 250 போ் நினைவுப் பரிசளித்து பாராட்டப்பட்டனா். இதில், ராசிபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.