/

கொண்டலூா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்ற மாணவா்கள்.

News image
~
Updated On :27 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விஜயா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஷேக் உசைன், மாடியனூா் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் பாலச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

தொடா்ந்து, பொதிகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கீழப்பாவூா் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் மைக்கேல் ராஜ் வரவேற்றாா். ஆசிரியா் மீனாட்சி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் வெனிஸ்டா பொன் சுதா, சகுந்தலா (எ) ராஜகனி, உமா மகேஸ்வரி, தன்னாா்வலா்கள் அா்ச்சனா, சோனியா, அங்கன்வாடி ஆசிரியா் ராஜலட்சுமி, சத்துணவு அமைப்பாளா் பொன்ஷீலா ஆகியோா் செய்திருந்தனா்.

Story image