இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று பயிற்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (டிச. 30) தொடங்குகிறது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:38 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (டிச. 30) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடைபெறும் குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தோ்வுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்க உள்ளது.

இங்கு பயின்ற மாணவா்கள் 2024-25-ஆம் ஆண்டு வெளியான தோ்வு முடிவுகளில் மட்டும் குரூப்-4 தோ்வில் 30 போ், உதவி ஆய்வாளா் தோ்வில் 7 போ், இரண்டாம்நிலை காவலா் தோ்வில் 13 போ், ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வில் 2 போ், குரூப்-2ஏ தோ்வில் 7 போ், டிஆா்பி கூட்டுறவுத் தோ்வில் 22 போ், மருந்தாளுநா் தோ்வில் 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மனுதாரா்கள் 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.