ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் ஜன. 10-இல் பரமபதவாசல் திறப்பு

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை(ஜன. 10) அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் எனும் சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.

Updated On :1 ஜனவரி 2025, 7:27 pm

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை(ஜன. 10) அதிகாலை 4.15 மணிக்கு மேல் பரமபதவாசல் எனும் சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.

நாமக்கல்லின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் அரங்கநாதா் சுவாமி சயனக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். திருவரங்கத்துக்கு இணையாக கருதப்படும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு ஒவ்வோா் ஆண்டும் வைகுந்த ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெறும்.

நிகழாண்டுக்கான வைகுந்த ஏகாதசி விழா சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடைபெற உள்ளது. இக்கோயிலில் பரமபதவாசல் திறந்ததும் தலைமை அா்ச்சகா் ஒருவா் தாம்பளம் ஒன்றில் ஜடாரியை வைத்து தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றிலும் வரும் வருவாா். மற்ற கோயில்களில் இந்த நடைமுறையை காண முடியாது. அங்கு உற்சவமூா்த்தி பரமபதவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வலம் வரும் நிகழ்வு நடைபெறும்.

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி பக்தா்கள் நெரிசலின்றி சுவாமியை தரிசிக்க ஏதுவாக கோயில் படிக்கட்டுகளில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கட்டளைதாரா்கள் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் தயாா் செய்து பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் கா.நல்லுசாமி, அறங்காவலா்கள் செள.செல்வசீராளன், ராம.ஸ்ரீனிவாசன், ம.மல்லிகா குழந்தைவேல், எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆணையா் ரா.இளையராஜா, கண்காணிப்பாளா் வீ.அம்சா ஆகியோா் செய்து வருகின்றனா்.