ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காடச்சநல்லூரில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

காடச்சநல்லூரில் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பணிகளை முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தொடங்கி வைத்தாா்.

News image

காடச்சநல்லூரில் புதிய திட்டப் பணியைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.

Updated On :2 ஜனவரி 2025, 7:22 pm

காடச்சநல்லூரில் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பணிகளை முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஜனதா நகரில் வசித்த 654 குடும்பத்தினா், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனா். முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான பி.தங்கமணி முயற்சியால், காடச்சநல்லூா் ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தற்போது, அந்தப் பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்வதற்காக 15-ஆவது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தப் பணிகளை பி.தங்கமணி எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், பள்ளிபாளையம் நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளா் எஸ்.செந்தில், ஆலம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லதுரை, ஊராட்சி மன்றத் தலைவி சாரதா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.