ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சீராப்பள்ளியில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:16 pm

Din

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 18.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பூமி பூஜை செய்து அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசாமி, சீராப்பள்ளி பேரூராட்சி திமுக செயலா் செல்வராஜ், பேரூராட்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.