ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

News image

மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :8 ஜனவரி 2025, 8:30 pm

மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், தோளூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 319 பயனாளிகளுக்கு ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திடும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அரசு அலுவலகங்களை தேடிச்சென்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிய நிலையில், அனைத்துத் துறையினரும் கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடா்பு திட்ட முகாமை நடத்த முதல்வா் உத்தரவிட்டாா்.

மோகனூா் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், ரூ. 66.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை மக்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செ.சதீஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், வட்டாட்சியா் மணிகண்டன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.