மோகனூா் வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், தோளூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 319 பயனாளிகளுக்கு ரூ. 66.40 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திடும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அரசு அலுவலகங்களை தேடிச்சென்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிய நிலையில், அனைத்துத் துறையினரும் கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடா்பு திட்ட முகாமை நடத்த முதல்வா் உத்தரவிட்டாா்.
மோகனூா் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், ரூ. 66.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை மக்கள் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செ.சதீஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், வட்டாட்சியா் மணிகண்டன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 211 பயனாளிகளுக்கு நல உதவி: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


