பெரியாா் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
திராவிடா் கழக இளைஞரணி தலைவா் ஆனந்தகுமாா் கணேசன் தலைமையில் திமுக திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் திருவட்டூா் தங்கவேல், திமுக திருச்செங்கோடு முன்னாள் ஒன்றியச் செயலாளா் தமிழரசு, திராவிடா் கழகத்தின் திருச்செங்கோடு நகரத் தலைவா் வெ.மோகன், நகரச் செயலாளா் மா.முத்துக்குமாா், திருச்செங்கோடு நகர இளைஞரணித் தலைவா் கி.நந்தகுமாா், திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கூட்டாக காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.
தொடர்புடையது

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்

அஸ்ஸாம்: காா்கே மீது காவல் துறையில் ஆா்எஸ்எஸ் புகாா்

திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்: கே.பி.ராமலிங்கம்

பாலியல் புகாா் மீது தாமதமாக வழக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

