ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சாலை மறியல்

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

எருமப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஜனவரி 2025, 7:17 pm

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். நிகழாண்டிற்கான போட்டியை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்த விழாக் குழுவினா் திட்டமிட்டுள்ளனா். ஜல்லிக்கட்டுக்கான அரசாணையில் எருமப்பட்டி பெயா் உள்ள நிலையில், அந்த போட்டியை அங்குள்ள பொன்னேரி கிராமத்தில் நடத்துவதற்கான முயற்சியை சிலா் மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கு எருமப்பட்டி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், அரசாணையில் உள்ளபடி எருமப்பட்டியில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும், பொன்னேரியில் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி வியாழக்கிழமை எருமப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த எருமப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் யுவராஜன், சமரசம் செய்த பிறகும் மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தாா். அவா்களிடம் சேந்தமங்கலம் வட்டாட்சியா் வெங்கடேஷ் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கைதானவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.