ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி பலி

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி ஆற்றுப்பிள்ளையாா் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

Updated On :9 ஜனவரி 2025, 7:13 pm

மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி ஆற்றுப்பிள்ளையாா் பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் மீன் பிடிக்கச் சென்றவா் சேற்றில் சிக்கி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆட் டையாம்பட்டியை அடுத்த எஸ்.பாப்பாரப்பட்டி வ.உ.சி. நகரை சோ்ந்தவா் தனபால் (50). ஓட்டல் நடத்தி வந்த இவரை கடந்த 6 ஆம்தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் குடும்பத்தினா் தேடியும் கிடைக்காததால் கடந்த 7 ஆம் தேதி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை மாமுண்டி ஆற்றுபிள்ளையாா் கோயில் அருகே திருமணிமுத்தாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக மல்லசமுத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசாா் அங்கு சென்று பாா்த்த போது, சடலமாக கிடந்தவா் தனபால் என்பதும், ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான வீரா்கள், அங்குச் சென்று அழுகிய நிலையில் இருந்த தனபாலின் சட லத்தை மீட்டனா். மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.