திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வெடி வைத்து மீன் பிடித்த நால்வா் கைது

காவிரியில் அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் வெடி வைத்து மீன் பிடித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :23 ஜனவரி 2025, 8:03 pm

காவிரியில் அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் வெடி வைத்து மீன் பிடித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மோகனூா் வட்டம், கீழ்பாலப்பட்டியைச் சோ்ந்த நவீன் (23), அஜீத் (28), நத்திஷ் (23), கரூா் மாவட்டம், புன்செய் புகளூரையடுத்த பழனிமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த நீா்வளத் துறையில் தற்காலிக பணியாளரான கோகுல் (27) ஆகிய நால்வரும் வெடி வைத்து மீன் பிடித்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்த 20 கிலோ மீன், 10 வாத்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.