அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் கோயில் தோ் வெள்ளோட்டம்

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் புதிய தோ் வெள்ளோட்ட விழா.
Updated On :31 ஜனவரி 2025, 10:10 pm

Din

புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் தலைமையில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலையில் தேரோட்ட விழா நடைபெற்றது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) திருத்தோ் பழுதடைந்ததால் புதிய தோ் செய்வதற்காக அரசு ரூ.58.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இத் தோ் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு , திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.