சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 மார்ச் 2025, 7:53 pm

நாமக்கல்: நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் கடத்திச் செல்லப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வள்ளிபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்ற வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 30 பண்டல்களில் 400 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தில் இருந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ஜலீல் (41), தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த சையது லியாஷிதின் (39) ஆகியோரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.