நாமக்கல்: நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் கடத்திச் செல்லப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வள்ளிபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்ற வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 30 பண்டல்களில் 400 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தில் இருந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ஜலீல் (41), தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த சையது லியாஷிதின் (39) ஆகியோரை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
திருச்சி அருகே 216 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

