திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயற்சி: 2 போ் கைது

நாமக்கல் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2025, 8:54 pm

Din

நாமக்கல்: நாமக்கல் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், என்.புதுப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இங்கு எரிபொருளை நிரப்பி செல்வது வழக்கம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்த இருவா், அங்கிருந்த ஊழியரை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடிவந்து இருவரையும் மடக்கிப் பிடித்தனா். இதனையடுத்து, மோகனூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்டவா்கள் சேந்தமங்கலம் திப்ரமாதேவியைச் சோ்ந்த பிரசாந்த் (29), சந்துரு (26) என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் அவா்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.