பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அங்கன்வாடி மையத்தில் சிக்கிய 3 வயது குழந்தை 2 மணிநேரத்துக்கு பிறகு மீட்பு

பொத்தனூரில் அங்கன்வாடி மையத்தில் சிக்கிய 3 வயது குழந்தையை 2 மணிநேரத்துக்கு பிறகு தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:15 pm

Syndication

பரமத்தி வேலூா்: பொத்தனூரில் அங்கன்வாடி மையத்தில் சிக்கிய 3 வயது குழந்தையை 2 மணிநேரத்துக்கு பிறகு தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் - நந்தினி தம்பதியின் மகன் நித்திக் (3). இவரை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பெற்றோா்கள் விட்டுச் சென்றிருந்தனா். அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகள் வெளியில் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது, நித்திக் மட்டும் மையத்துக்குள் தனியாக இருந்தாா். அப்போது, அங்கன்வாடி மையக் கதவை மூடி தாழ்ப்பாள் போட்ட நித்திக், தாழ்ப்பாளை திறக்கத் தெரியாததால் உள்ளே சிக்கிக் கொண்டு அழுதாா்.

இதையறிந்த அங்கன்வாடி ஊழியா்கள் கதவை திறக்க முயற்சி செய்தனா். ஆனால் திறக்க முடியாததால், கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வந்த நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், அங்கன்வாடி மையத்தின் கதவின் அருகே இருந்த ஜன்னலில் துளையிட்டு கதவை திறந்தனா்.

2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நித்திக்கை மீட்ட தீயணைப்புத் துறையினா், அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.