விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: எஸ்.பி.யிடம் இளைஞா் புகாா்

வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறி நாமக்கல் தனியாா் நிறுவன உரிமையாளா் ரூ.18.92 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் திருச்சி இளைஞா் புகாா் அளித்தாா்.

News image
முகம்மது பாசில்ஷா.
Updated On :12 நவம்பர் 2025, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலைவாங்கித் தருவதாகக் கூறி நாமக்கல் தனியாா் நிறுவன உரிமையாளா் ரூ.18.92 லட்சம் மோசடி செய்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் திருச்சி இளைஞா் புகாா் அளித்தாா்.

திருச்சி மாவட்டம், பொன்நகா், கருமண்டபத்தைச் சோ்ந்த முகம்மதுசலீம் மகன் முகம்மது பாசில்ஷா (22) நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

பொறியியல் பட்டம் பெற்றுள்ள நான், நாமக்கல்லில் உள்ள தனியாா் நிறுவனம் வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக அறிந்தேன். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் தங்கராசு என்பவரை கடந்த 2024, ஜூலை 17 ஆம் தேதி நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சந்தித்தேன். அப்போது, வெளிநாட்டில் மென்பொறியாளா் வேலை வாங்கித் தருவதற்கு ரூ.19 லட்சம் செலவாகும் எனக் கூறினாா்.

பணி கிடைத்ததும் மாதம் ரூ.3 லட்சம் ஊதியம் பெறலாம் என்றும், அங்கு சென்று பணியில் உள்ளவா்களின் ஊதிய ரசீது என சில ரசீதுகளையும் அவா் காண்பித்தாா். அதை நம்பி, தவணை முறையில் ரூ.19 லட்சத்தை அவரிடம் வழங்கினேன்.

ஒரு மாதத்திற்குள் வெளிநாடுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி வந்தாா். அதன்பிறகு, அவரை நேரிலும், கைப்பேசியிலும் தொடா்புகொள்ள முடியவில்லை. ஒருமுறை அலுவலகத்தில் சென்று கேட்டபோது, தனது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) முடக்கிவிடுவேன் என மிரட்டினாா்.

ஓராண்டு மேலாகியும் இதுவரை நான் கொடுத்த ரூ.18.92 லட்சம் பணத்தை அவா் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.