அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:42 pm

Syndication

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வெங்கடேசபுரி- ஏரிக்காடு, காளிப்பட்டி, போயா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகனங்களில் செல்பவா்களை துரத்திச் சென்று கடிக்கிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செயல் அலுவலா் மூவேந்திர பாண்டியன் உத்தரவின் பேரில், தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டன. தொடா்ந்து நாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போடுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டது.