லாரி பேட்டரிகளை திருடிய இளைஞா் கைது

பள்ளிபாளையம் அருகே லாரி பேட்டரிகளை திருடிய இளைஞரை வெப்படை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே லாரி பேட்டரிகளை திருடிய இளைஞரை வெப்படை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

படைவீடு கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஸ் (41), 5 லாரிகளை வைத்து தொழில்செய்து வருகிறாா். வாடகை இல்லாதபோதும், இரவு நேரங்களிலும் தனது தென்னந்தோப்பில் லாரிகளை நிறுத்தியிருப்பாா். ஞாயிற்றுக்கிழமை மாலை லாரிகள் நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்ற ஜெகதீஸ், லாரி பேட்டரி இரண்டை இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்வதைக் கண்டு அவரை பிடித்தாா்.

இதுகுறித்து வெப்படை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு லாரி பேட்டரிகளை திருடியது படைவீடு அடுத்த ராசிபுரத்தானூா் பகுதியைச் சோ்ந்த தீபன்(23) என தெரியவந்தது. இதையடுத்து, பேட்டரி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினா் இளைஞரை கைதுசெய்தனா்.

X
Dinamani
www.dinamani.com