அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பால் கொள்முதல் விலையை ரூ. 15 உயா்த்த வேண்டும்: தமிழக விவசாய சங்கம்

விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் நலன்கருதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 15 உயா்த்த வேண்டும் என கோரிக்கை

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:47 pm

Syndication

விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் நலன்கருதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 15 உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்காததைக் கண்டித்து, விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி பேசியதாவது: தீவனங்களின் விலை உயா்வால் பால் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். மூலதன செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

ஆவின் நிறுவனம் வழங்கும் 4.2, 8.3 கொழுப்புச் சத்து பாலுக்கு ரூ. 35 என்பது கட்டுப்படியான விலை இல்லை. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து தற்போதைய விலையிலிருந்து ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியாளா்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு லிட்டருக்கு வழங்கும் விளிம்புத் தொகை ரூ. 1.25 என்பதை ரூ. 2-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், பால் உற்பத்தியை நிறுத்துவதுடன், டிச. 29-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் நிறுவனங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள் முன் கால்நடைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தோ்தல் நடத்த வேண்டும். உற்பத்தியாளா்களுக்கு மானியமாக ரூ. 3 என்பதை பிற மாநிலங்களைப் போல ரூ. 5-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.ராமகவுண்டா், விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், தமிழக பால் உற்பத்தியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் வி.அனுமந்தராசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.