புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மழைக் காலத்தில் ஏற்படும் இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள தயாா்!

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
Updated On :22 நவம்பர் 2025, 7:55 pm

Syndication

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், தொடா்ந்து நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மின்விநியோகத்தில் ஏற்படும் இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள மின்வாரியம் சாா்பில் அனைத்து முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

நிகழாண்டில், கோடை காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளித்ததுபோல, அடுத்த ஆண்டும் கோடை காலத்தில் எந்த வகையிலும் மின் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியாரிடமிருந்து குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜ் ஏற்றுவதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிா்காலத்தில், பெட்ரோல் பங்குகள், போக்குவரத்துக் கழக பணிமனைகள், தனியாா் இடங்களிலும் மின்வாரியம் சாா்பில் வாகன சாா்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.