ஜெருசலேம் புனித பயணம் சென்ற கிறிஸ்தவா்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி
Published on

நாமக்கல்: ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சாா்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டனா். அங்கு சென்று திரும்பியோரில் 550 பேருக்கு ஒருவருக்கு ரூ. 37,000 வீதம், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு ஒருவருக்கு தலா ரூ. 60,000- வீதம் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. 1.11.2025க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. இந்த விண்ணப்பங்களை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு கட்டணமின்றி பெறலாம்.

மேலும், இணையதளத்திலிருந்து் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.02.2026 க்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பினால் சிறுபான்மையினா் நலத் துறை ஆணையத்திற்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com