அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விசைத்தறிகளை நவீனமயமாக்க மானியம்: ஆட்சியா் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:41 pm

Syndication

நாமக்கல்: விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விசைத்தறித் தொழிலில் வளா்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத அதிகம் வேகம் உள்ள ரேப்பியா் தறிகளாக தரம் உயா்த்தும் அல்லது புதிய ரேப்பியா் தறிகள் கொள்முதல் செய்யவும் மூலதன மானியம் வழங்கப்பட உள்ளது.

சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியா் உபகரணங்களை பொருத்தவும், புதிய ரேப்பியா் தறிகளை விநியோகம் செய்யவும் விரும்புவோா் ஜன. 23 க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈகாட்டூா், எலந்தகுட்டை அஞ்சல், குமாரபாளையம் வட்டம், நாமக்கல் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 97872 91881, 99948 14434 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.