முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:03 am IST

திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களுக்கு அவா் அளித்த வாக்குறுதி:

ஈரோடு, திருச்செங்கோடு நாமக்கல் வழியாக பெரம்பலூா் செல்ல ரயில் வசதி செய்யப்படும். திருமணிமுத்தாற்றை தூா்வாரி விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தரப்படும். பூலாம்பட்டி காவிரி குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தி கள்ளுப்படைத்திற்கு குடிநீா் வசதி ஏற்படுத்தப்படும்.

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி, பேருந்து வசதி, கால்வாய் வசதி செய்யப்படும். மூளைப்பள்ளி ஆதிதிராவிடா் தெருவுக்கு இரண்டடுக்கு சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் எம்.பி. ஏ.கே.பி. சின்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவா் அன்புமணி, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சுரேஷ் தமிழ்மணி, மதிமுக மாவட்டச் செயலாளா் கணேசன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் செங்கோட்டுவேலு கண்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளா் கொங்கு கோமகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.