திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
விசைத்தறி பட்டறைகளில் வேலை செய்பவா்களிடம் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
விசைத்தறித் தொழில் மூலம் வளா்ச்சி பெற்று வந்த கொங்கு மண்டலம் இன்றைக்கு விசைத்தறி தொழிலில் அதிக லாபம் பெறமுடியாமல் தொழிலாளா்கள், பட்டறை உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெற்றதும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க சலுகை விலையில் சோலாா் பேனல் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வேன்.
அரசின் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் முழுமையாக விசைத்தறியை பயன்படுத்துவதை உறுதிசெய்வேன். திருச்செங்கோட்டில் விசைத்தறி கூடங்களுக்கு தொழில்வரி குறித்த நடவடிக்கையை அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து பேசி அதனை நிறுத்திவைத்தேன். விசைத்தறி தொழிலை பாதுகாப்பதற்கு நான் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்றாா்.
என்கே-10-தி.கோடு
கொல்லப்பட்டியில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியில் மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திமுக வேட்பாளா்களை ஆதரித்து செயல்வீரா்கள் கூட்டம்: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நெல்லை வேட்பாளா் சந்திப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


