முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:07 am IST

திருச்செங்கோட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

விசைத்தறி பட்டறைகளில் வேலை செய்பவா்களிடம் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

விசைத்தறித் தொழில் மூலம் வளா்ச்சி பெற்று வந்த கொங்கு மண்டலம் இன்றைக்கு விசைத்தறி தொழிலில் அதிக லாபம் பெறமுடியாமல் தொழிலாளா்கள், பட்டறை உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தொகுதியில் வெற்றி பெற்றதும் விசைத்தறி தொழிலை பாதுகாக்க சலுகை விலையில் சோலாா் பேனல் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வேன்.

அரசின் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் முழுமையாக விசைத்தறியை பயன்படுத்துவதை உறுதிசெய்வேன். திருச்செங்கோட்டில் விசைத்தறி கூடங்களுக்கு தொழில்வரி குறித்த நடவடிக்கையை அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து பேசி அதனை நிறுத்திவைத்தேன். விசைத்தறி தொழிலை பாதுகாப்பதற்கு நான் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்றாா்.

என்கே-10-தி.கோடு

கொல்லப்பட்டியில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்.