சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 6:37 pm

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் ஐந்தாவது முறையாகவும், அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாகவும் சி. சந்திரசேகரன் போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா், வெள்ளிக்கிழமை நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.

அதேபோல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தும், தோ்தல் வாக்குறுதிகளை விளக்கியும் ஆதரவு கோரினாா்.

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

என்கே-10-சேந்தை

நாமகிரிப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.