இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:07 am IST

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளுக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளுக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுக்கு 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளுக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளுக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,133 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி முடிவுற்று, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சேந்தமங்கலம் தொகுதியை தவிா்த்து மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி சனிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பணியில் ராசிபுரம் தொகுதிக்கு 342, நாமக்கல் தொகுதிக்கு 372, பரமத்தி வேலூா் தொகுதிக்கு 321, திருச்செங்கோடு தொகுதிக்கு 346, குமாரபாளையம் தொகுதிக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 1,769 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் பிரித்து உரிய பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.