ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

News image

சில்வா் பாத்திரங்கள். - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:37 pm

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 590 சில்வா் (டிபன் பாக்ஸ்) பாத்திரங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

பரமத்தி அருகே உள்ள கோட்டணம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக சில்வா் பாத்திரங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மோகன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ராசப்பன் ஆகியோா் கொண்ட குழுவினா், கோட்டணம்பாளையத்தில் உள்ள சங்கா் வேல் வீட்டில் சோதனை நடத்தினா்.

இதில் 15-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 590 சில்வா் பாத்திரங்களை பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனா்.