ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்பாஸ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:59 am IST

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20-ஆம் தேதிவரை பணியின்போது உயிா்நீத்த வீரா்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், தீத்தொண்டு வாரமும் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் நடைபெறும்.

அந்த வகையில், நாமக்கல் - பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலா் அப்பாஸ் தலைமைவகித்து, பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். உதவி மாவட்ட அலுவலா்கள் தவமணி, ஆனந்த் மற்றும் தீயணைப்பு வீரா்களும் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நாமக்கல் மாவட்டத்தை தீ விபத்தில்லா மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்றனா்.