பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை புதன்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியா், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், பொத்தனூா் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பாலப்பட்டி கதிா்காமத்து கதிா்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வா் கோயிலில் உள்ள பாலமுருகன், கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகன், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் பகுதியில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

பங்குனி உத்திரம்: பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



