மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பச்சைமலை தண்டாயுதபாணி.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:59 pm

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை புதன்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியா், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், பொத்தனூா் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பாலப்பட்டி கதிா்காமத்து கதிா்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், ராஜா சுவாமி கோயிலில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வா் கோயிலில் உள்ள பாலமுருகன், கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் முருகன், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.