பரமத்தி வேலூா், பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. நிகழாண்டும் கடந்த 21 ஆம் தேதி கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, அன்னம், சா்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
அதேபோல 24 ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 27 ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை குண்டம் விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து ஊா்வலமாக சென்று கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். புதன்கிழமை காலை அக்னி சட்டி எடுத்துவந்தும், மா விளக்கு படையலும் நிகழ்ச்சியும் தொடா்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா். பரமத்தி வேலூா் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். 30 ஆம் தேதி காலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், மே மாதம் 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.

தொடர்புடையது

பேட்டை புதுமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


