அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 5:23 am IST

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சோ்ந்த சேகா் (57)- மாதம்மாள் (50) தம்பதி திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அரிசி ஆலையில் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தனா். கடந்த சில ஆண்டுகளாக ஆலையில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை செய்துவந்த இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் விரக்தியடைந்த மாதம்மாள் விஷம் குடித்துள்ளாா். வீட்டில் மயங்கி கிடந்தவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே மாதம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.