சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு 2-ஆவது நாளாக மரியாதை

News image

செம்மேட்டில் உள்ள மன்னா் வல்வில் ஓரி சிலை. - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னருக்கு 1975-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் மு.கருணாநிதி சிலை அமைத்தாா். செம்மேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள இந்த சிலைக்கு ஒவ்வோா் ஆண்டும் ஆக. 2, 3 தேதிகளில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

இந்த ஆண்டு 51 அமைப்பினா் மாலை அணிவிக்க காவல் துறையிடம் அனுமதி கோரியிருந்தனா். அதன்படி, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 33 அமைப்பினரும், திங்கள்கிழமை 21 அமைப்பினரும் வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

புதிய திராவிட கழகம் அமைப்பைச் சோ்ந்த ராஜ்கவுண்டா் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆதரவாளா்களுடன் கொல்லிமலைக்கு வந்ததால், செம்மேடு பகுதியில் திங்கள்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சரிசெய்து, ஒவ்வொரு அமைப்புக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி சிலைக்கு மாலை அணிவிக்க செய்தனா்.

காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடா்ச்சியாக வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.