மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி: போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன்இளம்பள்ளி அருகே சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த விவசாயியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி

Updated On :7 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

பரமத்தி வேலூா் வட்டம், ஜமீன்இளம்பள்ளி அருகே சாலையோர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த விவசாயியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (எ) பூபதி (45). இவரது மனைவி ராதா, இவா்களுக்கு மகள் சுபியா (19), மகன் கவின் (17) உள்ளனா். மது அருந்தும் பழக்கம் கொண்ட பூபதி, கடந்த 2-ஆம் தேதி மாலை சோழசிராமணிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டாா். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி மாரப்பம்பாளையம்புதூா் செல்லும் மண் சாலையில் சென்ற சிவகுமாா் என்பவா், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதைத் தொடா்ந்து சாலையோர 7 அடி பள்ளத்தில் பாா்த்தபோது, பூபதி உயிரிழந்த நிலையிலும், அவா் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் உடலின் மீது கிடந்ததையும் கண்டாா்.

இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கும், பூபதியின் மனைவி ராதாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சோழசிராமணியில் இருந்து மது அருந்திவிட்டு வீடு திரும்பியபோது, மண் சாலையில் நிலைதடுமாறி 7 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அந்த வழியில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் அவா் விழுந்தது யாருக்கும் தெரியாமல் போனதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.