மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு

பரமத்தி வேலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:27 am IST

பரமத்தி வேலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (46). இவா் கரூா் மாவட்டம், புகளூா் தமிழ்நாடு காகித ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கு திருமணம் ஆகாததால் இவா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இவா் செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு சென்று விட்டு புதன்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து குணசேகரன், வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டு நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.