
வாகனச் சோதனை: விதிமுறை மீறி இயங்கிய இரு வாகனங்கள் பறிமுதல்
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், விதிமுறைகள் மீறிய வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

கோப்புப் படம்
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், விதிமுறைகள் மீறிய வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகனபிரியா, போக்குவரத்து ஆய்வாளா் உமா மகேஸ்வரி ஆகியோா் பரமத்தி வேலூா் சாலையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை செய்தனா்.
அப்போது, சொந்த வாகனத்தை வாடகைக்கு உபயோகப்படுத்திய 2 வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.
தொடா்ந்து, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாத 15- க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ. 2.15 லட்சம் அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




