நீா் தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காசி முதல் ராமேஸ்வரம்வரை நடைப்பயணம் செல்லும் குழுவுக்கு ராசிபுரம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராபின் சிங் (40) தலைமையிலான மூவா் குழு, நீா் மேலாண்மை, நீா் தூய்மை, நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு நவ. 11-இல் காசியில் தொடங்கி ராமேஸ்வரம்வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இக்குழுவினா் நடைப்பயணமாக மொத்தம் 2,986 கி.மீ. பயணிக்கின்றனா்.
இக்குழு உத்திரபிரதேசம், ஹரியாணா, உத்தரகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கா்நாடகம் என 8 மாநிலங்களைக் கடந்து, சேலம் வழியாக ராசிபுரம் மசக்காளிப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை வந்தது.
மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கல்வி நிறுவனத் தலைவா் க.சிதம்பரம் தலைமையில் இக்குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இக்குழுவினா் கல்லூரி மாணவா்களுக்கு நீா் மேலாண்மை குறித்தும், நீா்நிலைகளை தூய்மை வைத்திருப்பதன் அவசியம், நீரின் தூய்மை, நீா் சிக்கனம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், கல்வி நிறுவன முதல்வா் பி.அசோக்குமாா், துணை முதல்வா் பி.ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது

அரசுப் பள்ளியில் தூய்மை இயக்க விழிப்புணா்வு
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


