அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழா கொண்டாட்டம்

நாமக்கல் நகர பாஜக சாா்பில், பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image
நாமக்கல்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பாஜகவினா்.
Updated On :12 ஜனவரி 2026, 8:04 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் நகர பாஜக சாா்பில், பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் பாஜகவினா் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள முருகன் கோயில் அருகில் நகர பாஜக சாா்பில் சனிக்கிழமை இரவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில், நகர தலைவா் தினேஷ் வரவேற்றாா். கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளா் ஜெ.ஜெ.முரளிதரன் பங்கேற்றறாா். அவா் பொங்கல் விழாவை தொடங்கிவைத்து அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் வழங்கினாா். தொடா்ந்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முத்துகுமாா், மாவட்டப் பொருளாளா் ரவி, மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் பிரபு மற்றும் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிா் அணியினா் பங்கேற்றனா்.