மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயில் 1,300 படிகளில் யோகாசனம் செய்து சிறுமி சாதனை

News image
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயில் படிகளில் யோகாசனம் செய்தபடி ஏறிய சிறுமி ஹனா.
Updated On :24 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் 1,300 படிகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறி சேலத்தைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சனிக்கிழமை யோகா விழிப்புணா்வு சாதனை படைத்தாா்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜூபோ் அகமது - அதியா பானு தம்பதியின் மகள் ஹனா (8). இவா், சேலம் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். மேலும், சேலம் சிவகுரு யோகாசன மையத்தில் யோகாசனம் பயின்று வருகிறாா்.

யோகா விழிப்புணா்வு சாதனைக்காக சிறுமி ஹனா, திருச்செங்கோடு மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயிலில் தொடங்கி மலை உச்சிவரை 1,300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படியிலும் பல்வேறு யோகாசனங்கள் செய்து மலை ஏறினாா். சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு தொடங்கியவா் 10.30 மணி அளவில் 1,300 படியைக் கடந்து தனது சாதனை முயற்சியை நிறைவு செய்தாா்.

அவருடன், அவரது யோகாசன ஆசிரியா் சிவகுரு, யோகாசன சாலை யோகா ஆசிரியா் முரளி, பெற்றோா், சேலம் செவ்வாய்பேட்டை மாநகராட்சி உறுப்பினா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.